தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் நிலுவை பில்களைச் சரிபார்த்து அனுமதிக்கு அனுப்புவதற்காக 15 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிய கண்காணிப்பு பொறியாளரை ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
ஹைதராபாத்தின் குக்கட்பல்லி மண்டல கண்காணிப்பு பொறியாளராக பொட்டுத்துரி சின்னா ரெட்டி என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர் ஒரு ஒப்பந்ததாரர் முடித்த பணிகளுக்காக வழங்கப்பட வேண்டிய 1.40 கோடிக்கான நிலுவை பில்களைச் சரிபார்த்து, அனுமதிக்கு அனுப்ப 30 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
அதில் முதல் தவணையாக 15 லட்சத்தை கணினி ஆபரேட்டர் மூலமாகப் பெற்றபோது, இருவரும் கையும் களவுமான பிடிபட்டனர்.
இருவரையும் கைது செய்த ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
















