சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் பல ஆண்டுகளாகப் பயங்கரவாதத்தின் அடையாளமாகத் திகழ்ந்த முக்கிய மாவோயிஸ்ட் தலைவன் ராமண்ணாவின் நினைவிடத்தை CRPF படையினர் இடித்துத் தகர்த்தனர்.
சுக்மா மாவட்டத்தின் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள கோகுண்டா கிராமம், நீண்ட காலமாக மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.
இப்பகுதிகளை மாவோயிஸ்ட்டுகளிடமிருந்து விடுவிக்க மத்திய மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில் CRPF கமாண்டன்ட் ஹிமான்ஷு பாண்டே தலைமையிலான வீரர்கள், ராமண்ணாவுக்காக அமைக்கப்பட்டிருந்த நினைவிடத்தை இடித்து தகர்த்தனர்.
இது அங்கு மாவோயிஸ்டுகளின் செல்வாக்கு முடிவுக்கு வருவதைக் குறிக்கும் ஒரு முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
















