மக்களவையில் பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த காங்கிரஸ் எம்.பி.க்கள் திட்டமிட்டிருந்ததாக சபாநாயகர் ஓம் பிர்லா குற்றம் சாட்டியுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் ஒத்திவைக்கப்பட்ட மக்களவை பிற்பகல் மூன்று மணிக்கு மீண்டும் கூடியது. அப்போது பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, எதிர்க்கட்சிகளின் செயல்பாடு பிரதமர் அவையில் கலந்து கொள்ள முடியாத அளவிற்கு மோசமானதாக இருப்பதாக வேதனை தெரிவித்தார்.
மக்களவையில் பிரதமர் மோடியை காங்கிரஸ் எம்.பி.க்கள் தாக்க திட்டமிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். இந்த தகவல் கிடைத்தே கடந்த புதன்கிழமையன்று அவைக்கு வரவேண்டாமென பிரதமர் மோடியிடம் தெரிவித்ததாக அவர் கூறினார். மேலும் பெண் எம்.பி.க்களை கேடயமாக பயன்படுத்தி பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
பின்னர் எதிர்க்கட்சி எம்பிக்களின் தொடர் அமளியால் அவையை இன்று காலை 11 மணி வரை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.
















