ரஷ்யாவுடனான போரில் கொல்லப்பட்ட தங்கள் நாட்டு வீரர்களின் எண்ணிக்கையை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷியா-உக்ரைன் இடையிலான போர் 4 ஆண்டுகளைக் கடந்து நடந்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், ரஷ்யாவுக்கு எதிரான போரில் சுமார் 55,000 உக்ரைனிய வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்தார்.
மேலும், ஏராளமான மக்கள் அதிகாரப்பூர்வமாக காணாமல் போனதாக கருதப்படுவதாகவும் ஜெலன்ஸ்கி கூறினார்.
ரஷ்யா – உக்ரைன் அமைதிப் பேச்சுவாா்த்தையில் போா்க் கைதிகள் பரிமாற்றத்துக்கு ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் முன்னெடுப்பில் ரஷ்யா-உக்ரைன் இடையே முத்தரப்பு அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃப் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், உக்ரைன் மற்றும் ரயா தரப்பில் தலா 157 போா்க் கைதிகள் என மொத்தம் 314 போ் பரிமாறிக் கொள்ளப்பட உள்ளனா் என ஸ்டீவ் விட்காப் தெரிவித்துள்ளார்.
கடந்த 5 மாதங்களில் நடைபெறும் மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றம் இதுவாகும் என கூறியுள்ள ஸ்டீவ் விட்காப், ஆக்கப்பூா்வ பேச்சுவாா்த்தைகள் விரைவில் நிரந்தர போா்நிறுத்தம் ஏற்படும் என்ற நம்பிக்கையை தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
















