அதிபர் டிரம்ப்பை கொல்ல முயற்சித்தவருக்கு அமெரிக்க நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி, புளோரிடா மாகாணத்தில் உள்ள தனது வீட்டில் உள்ள கோல்ஃப் மைதானத்தில் டிரம்ப் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அவரது வீட்டுக்கு அருகே துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது.
இதையடுத்து துப்பாக்கியுடன் அங்கிருந்து ஓடியவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
விசாரணையில் அவரது பெயர் ரியான் வெஸ்லி ரூத் என்பது தெரியவந்தது. இந்த வழக்கின் விசாரணை அமெரிக்க நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்தாண்டு வெஸ்லி குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்நிலையில் வெஸ்லிக்கு ஆயுள் தண்டனை விதிப்பதாக நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
















