தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை பெற ஏராளமான தொண்டர்கள் பனையூர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தலை எதிர்கொள்ள தவெக தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தவெக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்பமனு விநியோகம் செய்யும் பணி தொடங்கியது.
பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில், தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருள்ராஜ் தலைமையில் விருப்ப விநியோகம் செய்யும் பணி தொடங்கியது.
வரும் 14-ஆம் தேதி வரை விருப்ப மனுக்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், விருப்ப மனுவை பெறுவதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வருகை தந்துள்ளனர். தவெக சார்பில் பொதுத் தொகுதியில் போட்டியிடுவோருக்கு 10 ஆயிரம் ரூபாயும், தனி தொகுதிக்கு 5 ஆயிரம் ரூபாய் என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
















