10 ஆண்டுகளில் ரயில்வே துறையின் நிதிநிலை மேம்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் பேசிய அவர், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், ரயில்வே துறையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். 2014-24ம் ஆண்டு கால கட்டத்தில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது மேலும் ஒன்றரை லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பயணிகள் வருவாயை அதிகரிக்கவும், செலவைக் கட்டுப்படுத்தவும் ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாவும் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
நாட்டில் சரக்கு போக்குவரத்து அதிகரித்துள்ள போதும், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 37 ஆயிரத்து 481 கோடியாக இருந்த எரிசக்தி செலவு, தற்போது 32 ஆயிரத்து 400 கோடியாக குறைந்துள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
















