மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் திமுக பொய் பிரசாரம் செய்வதாக அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜனம் தமிழ் தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்த அவர், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டிய எய்ம்ஸ் கட்டுமான பணி 40 சதவீதத்துக்கு மேல் நிறைவடைந்து உள்ளதாக தெரிவித்தார். மாணவர்களுக்கான விடுதி உணவுக்கூடம் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும், கட்டுமான பணிகள் பாதுகாப்பாகவும் தரமானதாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.
எய்ம்ஸ் மருத்துவமனையால் தமிழக மட்டுமல்ல தென்னிந்திய மக்கள் பயன்பெறுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். கட்டுமான பணிகள் முழுமையாக 2027க்குள் நிறைவடையும் என்றும் ராஜன் செல்லப்பப்பா குறிப்பிட்டார்.
















