சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றிருந்த அமைச்சர் பெரியகருப்பன், கூட்ட நெரிசலில் சிக்கி அவதியடைந்தார்.
ஸ்ரீ செளமிய நாராயண பெருமாள் கோயிலில் 36 கிலோ எடையில் தங்கக்கவசம் வேயப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் பெரிய கருப்பன் பங்கேற்றார்.
அப்போது காவல்துறை உரிய முன்னேற்பாடுகளை செய்யாததால் கூட்டத்தில் சிக்கிய அமைச்சரை, போலீசார் மீட்டு, சுவாமி தரிசனத்திற்காக அனுப்பி வைத்தனர்.
















