நினைத்தது நடக்கவில்லை எனில் அதை தோல்வியாக நினைக்க கூடாதென, மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை வழங்கினார்.
தேர்வு எழுதும் மாணவர்களின் அச்சத்தை போக்கும் விதமாக, ‘பரிக்ஷா பே சர்ச்சா’ எனும் நிகழ்ச்சி நாடு முழுவதும் நடைபெற்றது.
இதில், பிரதமர் மோடி, மாணவர்களுடன் கலந்துரையாடி அறிவுரைகளை வழங்கினார்.
இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.
தொடர்ந்து அவர் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, நினைத்தது நடக்கவில்லை எனில் அதை தோல்வியாக நினைக்க கூடாதென மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை வழங்கினார்.
















