தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் NDA கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,NDA கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றார். அதிமுக – பாஜக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் என்றும் அவர் கூறினார்.
திமுக கூட்டணியில் குழப்பம் உள்ளது என்றும் அதிமுக கூட்டணி தெளிவாக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
திடீரென முளைத்த கட்சிகளில் தேர்தலில் போட்டியிட ஆள் இல்லை என்றும் தினகரன் தெரிவித்தார்.
















