அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்றே, உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்ததாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்ததற்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஜாக்டோ ஜியோ சார்பில் சென்னை நந்தனத்தில் நன்றி தெரிவிக்கும் விழா நடத்தப்பட்டது.
இதில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்றே, உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்ததாக தெரிவித்தார்.
நிதி நெருக்கடியில் இருக்கும் நிலையிலும், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலித்ததாகவும் அவர் கூறினார். மேலும் ஆசிரியர்களின் உழைப்பால்தான் தமிழ்நாடு கல்வியில் சிறந்த மாநிலமாக திகழ்வதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே விழாவில் போதிய அளவில் ஊழியர்கள் பங்கேற்காததால் பாதிக்கும் மேல் காலி இருக்கைகளாக காணப்பட்டன. மேலும் முதலமைச்சர் உரையாற்றிக் கொண்டிருந்த போதே, பல வரிசைகளில் இருக்கைகள் நிரம்பாமல் இருந்த காட்சிகளும் வைரலாகி வருகிறது.
















