90-களில் பிறந்த மில்லினியல் தலைமுறையினரைவிட, தற்போதைய ஜென்சி தலைமுறையினரின் அறிவுத்திறன் மற்றும் கவனிக்கும் திறன் குறைந்து வருவதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
நரம்பியல் விஞ்ஞானி ஜாரெட் ஹோர்வத் நடத்திய ஆய்வின்படி, முந்தைய தலைமுறையைவிட அடுத்த தலைமுறையினரின் ஐகியூ அளவு அதிகமாக இருக்கும் என்ற ‘பிளைன் விளைவு’ கோட்பாடு தற்போது தலைகீழாக மாறியுள்ளது.
இதற்கு முக்கிய காரணமாக, தற்போதைய இளைஞர்களிடம் அதிகரித்துள்ள டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாடு மற்றும் சமூக ஊடக மோகம் ஆகியவை சுட்டிக்காட்டப்படுகின்றன.
இவை ஆழமாகச் சிந்திக்கும் திறனையும், ஒரு விஷயத்தில் நீண்ட நேரம் கவனம் செலுத்தும் ஆற்றலையும் வெகுவாகப் பாதித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
புள்ளிவிவரங்களின்படி, 2000-களின் தொடக்கத்தில் இருந்த மதுப் பழக்கத்தின் சதவீதம் தற்போது கணிசமாகக் குறைந்துள்ளதை காண முடிகிறது. அறிவுத்திறன் வீழ்ச்சி கவலையளித்தாலும், சமூகப் பழக்க வழக்கங்களில் ஏற்பட்டுள்ள இந்த ஆரோக்கியமான மாற்றம் ஒரு நல்ல அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
















