மலேசியாவில் "திருவள்ளுவர் மையம்" - பிரதமர் மோடியின் தமிழ்ப்பற்று
Mar 28, 2026, 02:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மலேசியாவில் “திருவள்ளுவர் மையம்” – பிரதமர் மோடியின் தமிழ்ப்பற்று

Manikandan by Manikandan
Feb 9, 2026, 07:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகிற்கு இந்தியா வழங்கிய கொடை தமிழ் மொழி என பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். மலேசியா வாழ் இந்தியர்கள் உடனான கலந்துரையாடலில் பிரதமர் மோடி பேசிய பேச்சு, தமிழ் மொழியை அவர் எந்த அளவுக்கு ஆழமாக நேசிக்கிறார் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, தமிழ் மொழியின் பெருமையை மீண்டுமொரு முறை உலகிற்கு பறைசாற்றியுள்ளார். தமிழ் மொழியின் தொன்மையான வரலாற்றினை அறிந்து, அதன் மீது தீரா காதல் கொண்டுள்ள பிரதமர் மோடி, தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் தமிழ் மொழியின் புகழை உலகிற்கு கொண்டுசேர்க்கிறார்.

அந்த வகையில், மலேசியா வாழ் இந்தியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தமிழ் கலாசாரம் உலகளாவியது எனவும், தமிழ் இலக்கியங்கள் என்றும் அழியா புகழ் கொண்டது எனவும் பெருமிதத்துடன் தெரிவித்தார். உலகிற்கு இந்தியா வழங்கிய கொடை தமிழ் மொழி என பிரதமர் மோடி குறிப்பிட்டதும் அரங்கமே கரவொலி எழுப்பியது.

மலேசியாவில் தமிழர்கள் அதிகம் வசிப்பது போல், இந்திய நிர்வாகத்திலும் தமிழர்கள் அதிகம் இருப்பதாக தெரிவித்த பிரதமர் மோடி, குடியரசுத்துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோரின் பெயர்களை உதாரணமாக கூறினார். இவர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் இருந்து வந்து உயர் பதவிகளை அலங்கரிப்பதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.

மலேசிய வாழ் தமிழர்கள் அதிகளவில் வசிப்பதை உணர்ந்தே மலேசிய பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி, தற்போது இந்த உறவை மேலும் வலுப்படுத்த திருவள்ளுவர் மையம் அமைக்கப்படும் என அறிவித்தார்.

ஒரு முறை மலேசிய பிரதமர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது, எம்ஜிஆரின் நான் ஆணையிட்டால் பாடல் ஒலிக்கப் பட, அதற்கு நடனம் ஆடியும், பாடல் பாடியும் விருந்தினர்களை குஷிப்படுத்தினார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பிரதமர் மோடி அதனைத் தனது உரையில் குறிப்பிட்டு பேசினார். பிரதமர் அன்வர் இப்ராகிம் அருமையான பாடகர் என மோடி பாராட்டு தெரிவிக்க, அவர் உற்சாகத்தின் மிகுதிக்கே சென்றார்.

இறுதியாக, இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வோம் என தெரிவித்த பிரதமர் மோடி, மிக்க நன்றி என தெரிவித்து உரையை முடித்ததும் அரங்கமே மோடி, மோடி என ஒலித்தது.

Tags: malaysiatamil cultureThiruvalluvar maiyam malaysiaPM Moditamilnadupm modi speech
ShareTweetSendShare
Previous Post

ரவுடித்தனம் செய்வதற்கான இடம் நாடாளுமன்றம் அல்ல – எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு கிரண் ரிஜிஜூ அறிவுறுத்தல்!

Next Post

விமானிகளுக்கு நண்பன் எதிரிகளுக்கு அசுரன் – சிம்மசொப்பனமாக மாறியிருக்கும் “ரஃபேல்” விமானம்

Related News

பிரதமர் மோடியின் கேரளம் வருகை – கோவையின் முக்கிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை!

நெல்லை:முன்பகை காரணமாக கட்டிட தொழிலாளி வெட்டிக்கொலை!

என்டிஏ கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது – இசக்கி சுப்பையா பேட்டி!

மதுரையில் தரமற்ற முறையில் தார் சாலை – கையோடு பெயர்ந்து வரும் அவலம்!

ராம நவமி- கிருஷ்ணகிரி ஆஞ்சநேயருக்கு ரோஜா மலர் அபிஷேகம்!

விவசாய வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை – அ.ம.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் டிடிவி தினகரன்!

Load More

அண்மைச் செய்திகள்

“பட்டியலின மக்களுக்கான நிதியை தமிழக அரசு திருப்பி அனுப்பியது”-ஏர்போர்ட் மூர்த்தி!

அமமுக வேட்பாளர் பட்டியல் – சைதாப்பேட்டையில் செந்தமிழன், திருச்சி மேற்கில் ராஜசேகரன் போட்டி!

மதுரையில் சுந்தர்.சி போட்டி – ஏசி. சண்முகம் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

காஞ்சிபுரம்:மீண்டும் பணி வழங்கக்கோரி தனியார் நிறுவன தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை:விதிகளை மீறி பேருந்து நிலைய நுழைவாயில் மீது திமுகவினர் விளம்பர பேனர்!

சென்னை பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டி : 30-ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார்!

கொடைக்கானல்:3வது நாளாக காட்டுத் தீயை அணைக்க முடியாமல் திணறும் தீயணைப்புத்துறை

காசிமேடு:மீன்பிடி துறைமுக இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மீனவர்கள்

கோவை பட்டீஸ்வரர் கோயில் தேரோட்டத்திற்கு அனுமதி மறுப்பு – பக்தர்கள் ஆர்பாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies