பாஜகவின் முன்னாள் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகனுக்கு ஆர்.எஸ்.எஸ்.-ல் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாஜகவின் மாநில அமைப்பு பொதுச்செயலாளராக இருந்து வந்த கேசவ விநாயகனுக்கு புதிய பொறுப்பை வழங்கி ஆர்.எஸ்.எஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முழு நேர ஊழியர்கள் நிர்வாக காரணங்களுக்காக பல்வேறு பொறுப்புகளுக்கு மாற்றப்படுவார்கள் எனவும், அது பல ஆண்களாக பின்பற்றப்படும் நடைமுறை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
அந்த வகையில் கேசவ விநாயகன் தமிழ்நாடு முழுவதும் சத்பாவ் என்ற பொறுப்பில் செயல்படுவார் எனவும், அவர் வட தமிழகத்தின் ஆர்.எஸ்.எஸ் மாநில செயற்குழு உறுப்பினராக செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
















