காங்கிரஸ் எம்பிக்கள் நாடாளுமன்றத்தின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு விமர்சித்துள்ளார்.
மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் பிரதமர் மோடியை தாக்க திட்டமிட்டிந்ததாக தனக்கு உறுதியான தகவல் கிடைத்ததாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். பிரதமரின் பாதுகாப்பு கருதியே அவரது பதிலுரை ரத்து செய்யப்பட்டதாகவும், எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்களை கேடயமாகப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டிருந்ததாக ஓம் பிர்லா கூறினார்.
பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் சதி செய்துள்ளதாக சபாநாயகர் ஓம் பிர்லா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பிரதமர் மோடியின் இருக்கைக்கு அருகே காங்கிரஸ் எம்பிக்கள் முற்றுகையிடும் வீடியோவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், காங்கிரஸ் கட்சி தங்கள் எம்பிக்களின் மிகவும் இழிவான நடத்தையைப் பற்றி பெருமை கொள்வதகவும், நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் பாதுகாப்பதில் தாங்கள் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், பாஜக உறுப்பினர்கள் எவ்வளவோ தடுத்தும் பிரதமரின் நாற்காலியை காங்கிரஸ் பெண் எம்பிக்கள் முற்றுகையிட்டதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
















