ராமதாஸை சுற்றியுள்ள பல துரோகிகளில் ஜி.கே.மணிதான் முக்கியமான துரோகி என அன்புமணி கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் பாமக இளைஞரணி பொதுக்குழு கூட்டத்தில் அவர், திமுக ஆட்சிக்கு எதிராக திரும்பிய திசையெல்லாம் போராட்டம் நடைபெறுவதாக தெரிவித்தார்.
பல நாடுகளில் இளைஞர்களின் புரட்சியால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், அனைத்து தரப்பு மக்களுக்கும் திமுக அரசு துரோகம் செய்து வருவதாகவும் கூறினார். பாமக நிறுவனர் ராமதாஸிடம் சிலர் பொய்யான தகவல்களை கூறி வருவதாகவும் அன்புமணி குறிப்பிட்டார்.
















