தேர்தல் வாக்குறுதியின்படி, பழனியை மார்ச் 5ம் தேதிக்குள் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என, திமுக அரசுக்கு அண்ணாமலை காலக்கெடு விதித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு பழனி தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என கடந்த தேர்தலின்போது திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஆட்சிப்பொறுப்பேற்று 5 ஆண்டுகள் முடியப்போகும் நிலையிலும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
இதனை கண்டித்து, பழனி பேருந்து நிலையம் அருகே பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய அண்ணாமலை, பழனி கோவில் நகரமாக இல்லாமல் குப்பை நகரமாக மாற்றப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 2 அமைச்சர்களும் கொள்ளை அடிப்பதிலேயே குறியாக உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
















