ராணிப்பேட்டை மாவட்டத்தில் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு அட்டை வழங்குவதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த கணியனூர் பகுதியில் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு அட்டை வழங்குவதாக 2 பெண்கள் உட்பட 3 பேர் தெரிவித்துள்ளனர்.
ஒரு காப்பீட்டு அட்டைக்கு 80 ரூபாய் பணமும் வசூலித்துள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த சிலர், அவர்களிடம் கேள்வி எழுப்பவே வசூலில் ஈடுபட்ட ஒரு பெண் தப்பியோடிவிட்டார்.
எஞ்சிய இருவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
















