மேற்கு வங்க மாநிலத்தின் கிழக்கு பர்தமான் மாவட்டத்தில் சுமார் 90 பேருக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு பர்மான் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வசித்து வரும் சுமார் 90 பேருக்கு எச்ஐவி பாதிப்புகள் ஏற்பட்டு அங்கு பெரும் சுகாதார அச்சுறுத்தல் உருவாகியுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரபல மருத்துவர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மூத்த கார்பரேட் அதிகாரிகள் ஆகியோர் எச்ஐவியால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.
இதையடுத்து, அவர்கள் பணியாற்றும் இடங்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்புகள் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நோய் எவ்வாறு பரவியது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களில் சிலர் சமூக ஊடகங்களின் வழியாக இணைந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனால், எச்ஐவி பாதிப்புகள் குறித்து கிழக்கு பர்தமான் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
















