கனடாவில் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர்.
கனடாவில் பிரிட்டிஷ் கொலாம்பியா என்ற இடத்தில் உள்ள மேல்நிலை பள்ளியில் அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியுடன் புகுந்துள்ளார்.
அப்போது அங்கிருந்தவர்கள் மீது அவர் சரமாரியதாக துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதில் 9 பேர் உயிரிழந்தனர். துப்பாகிக்கிச்சூடு நடத்திய நபரும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவலறிந்த வந்த போலீசார், பள்ளியை தங்களது கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்தனர்.
பின்னர் காயமடைந்த 25 பேரை மீட்ட போலீசார், அவர்களை மருத்துவமனைகளில் அனுமதித்தனர். இதனிடையே துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் பெண் என போலீசார் தெரிவித்தனர்.
















