ஈரோடு அருகே தோட்டத்து வீட்டில் 12 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்ததாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம் சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ரைஸ்மில்களில் ரேஷன் அரிசி விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு வருவதாக மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில், சிவகிரி ரங்கசமுத்திரம் பகுதியில் ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திலும், சரக்கு வாகனத்திலும் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார், ரைஸ்மில் உரிமையாளர் ராமலிங்கம் , மேலாளர் குழந்தைவேல், தாம்சன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
















