திருச்சியில் உயரதிகாரிகளை மதிக்காமல் பணியில் அலட்சியம் காட்டிய உப்பிலியாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் குமார், மூன்றாவது முறையாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
உப்பிலியாபுரம் அருகே சமத்துவபுரம் வீடுகள் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சமீபத்தில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அப்போது, செந்தில் குமார் ஒருமையில் பேசியதாக மறியலில் ஈடுபட்ட பெண்களிடம், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால், அந்த கூட்டத்தில் கலந்துகொள்ளாமல், செந்தில் குமார் செல்போனை switch off செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக செந்தில் குமார் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக, அரசுப் பள்ளிக்கு விடுமுறை அளித்து, உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தியது, எஸ்.ஐ.ஆர் பணியில் அலட்சியம் காட்டியது போன்ற காரணங்களுக்காக செந்தில் குமார் இரண்டு முறை சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது
















