நாடாளுமன்ற விதிகளை மீறி செயல்பட்ட மயிலாடுதுறை, கரூர் எம்.பிக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி குடியரசு தலைவருக்கு மயிலாடுதுறையில் இருந்து பாஜக நிர்வாகி ஆன்-லைன் புகார்
மயிலாடுதுறை, கரூர் காங்கிரஸ் எம்பிக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி குடியரசு தலைவரிடம் பாஜகவினர் ஆன்லைனில் புகார் அளித்துள்ளனர்.
பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, காங்கிரஸ் எம்பிக்களான ஜோதிமணி மற்றும் சுதா உள்ளிட்டோர் ரகளையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அவர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி மயிலாடுதுறையில் இருந்து பாஜகவினர் ஆன்லைனில் புகார் அளித்துள்ளனர்.
















