பொதுமக்கள் வெளியூர் செல்லும்போது பணம், நகைகளை பீரோ லாக்கர்களில் வைக்க வேண்டாமென பல்லடம் காவல் ஆய்வாளர் கேட்டுக் கொண்டார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சித்தம்பலம் பகுதியில், கடந்த 3 நாட்களுக்கு முன் ஆசிரியை ஜெகதா வீட்டில் 18 சவரன் நகைகள் திருடுபோகின.
இதேபோன்று அப்பகுதியில் உள்ள விடுகளிலும் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றன. இது தொடர்பாக பிரவீன்குமார், முருகன் ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 15 சவரன் நகைகள், 50 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
இதனிடையே சிசிடிவிக்கள் மூலம்தான் கொள்ளையர்களை விரைவாக பிடிக்க முடிந்ததாக காவல் ஆய்வாளர் மாதையன் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் வெளியூர்களுக்கு செல்லும்போது நகைகள், ரொக்கத்தை பீரோ லாக்கர்களில் வைக்காமல் வேறொரு இடங்களில் வைக்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.
















