கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, சேலத்தில் விஜய் பங்கேற்ற கூட்டத்திலும் நெரிசலில் சிக்கி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் தவெக தலைவர் விஜய் கரூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்தபோது, அங்கு பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போதுதான் விஜய் அடுத்தடுத்த கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்.
அந்த வகையில், சேலம் சீலநாயக்கன்பட்டியில் விஜய் பிரசாரம் செய்து வந்தபோது, நீண்ட நேரம் வெயிலில் காத்திருந்ததால் பலர் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
இதில் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த சுராஜ் என்ற இளைஞர், மருத்துவமனைக்குச் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















