வீடுகள்தோறும் ஓவியங்கள்..வீதிகள்தோறும் கலைப்பொருட்கள்.. சிறப்பு தொகுப்பு
Mar 31, 2026, 06:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வீடுகள்தோறும் ஓவியங்கள்..வீதிகள்தோறும் கலைப்பொருட்கள்.. சிறப்பு தொகுப்பு

Manikandan by Manikandan
Feb 13, 2026, 09:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒடிசாவில் உள்ள ஒரு ஒட்டுமொத்த கிராமமே இந்திய ஓவியக்கலைக்கும், கைவினை கலைக்கும் சான்றாக விளங்கி வருகிறது. அந்த கிராமம் குறித்து இந்த செய்தித்தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

பார்க்கும் இடமெல்லாம் ஓவியங்கள்…வீதிகள்தோறும் கைவினைப் பொருட்கள்…வீடுகள்தோறும் அழகிய அலங்காரங்கள்…

இதுதான், இந்தியாவின் பாரம்பரிய கைவினைக் கிராமமான ரகுராஜ்பூர்.

ஓடிசாவின் புரி நகரில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும், புவனேஸ்வரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள ரகுராஜ்பூரில் மொத்தமே 150 வீடுகள்தான் உள்ளன. ஆனால், அவை ஒவ்வொன்றிலுமே குறைந்தது 2 கைவினைக் கலைஞர்களும், ஓவியர்களும் இருக்கின்றனர்.

ரகுராஜ்பூர் கிராமத்தின் ஆன்மாவாக பட்டசித்ரா ஓவியங்கள் விளங்குகின்றன. ‘பட்டா’ என்றால் துணி. ‘சித்ரா’ என்றால் ஓவியம். பாரம்பரிய துணிகளில் இயற்கை வண்ணங்களை கொண்டு சித்திரங்களை வரைவதால், இந்த வகை ஓவியங்கள் பட்டசித்ரா என அழைக்கப்படுகின்றன.

புரி ஜெகன்நாதர் குறித்தும், இந்துப் புராணங்கள் பற்றியும், மகாபாரதம் ராமாயணம் போன்ற இதிகாசங்கள் குறித்தும் பட்டசித்ரா ஓவியங்கள் தீட்டப்படுகின்றன.


ஓவியங்களை தவிர்த்து, பாரம்பரிய முகமூடிகள், பனை ஓலை வேலைப்பாடுகள், காகிதக் கூழ் பொம்மைகள், மரச்சிற்பங்கள் உள்ளிட்டவைக்கும் ரகுராஜ்பூர் புகழ்பெற்று விளங்குகிறது. அத்துடன், புகழ்பெற்ற ஒடிசி நடனக் கலைஞரான கேளுச்சரண மகோபாத்திரா (Kelucharan Mohapatra) பிறந்த ஊர் என்ற பெருமையும் இக்கிராமத்திற்கு உண்டு.

வீடுகள்தோறும் ஓவியர்களும், கைவினைக் கலைஞர்களும் உள்ளதால், ஒட்டுமொத்த கிராமமே ஒரு கலைக்கூடம் போல காட்சியளிக்கிறது. இந்த கிராமத்திற்குள் நுழைந்தால், ஏதோ திறந்தவெளி அருங்காட்சியகத்திற்குள் நுழைந்துவிட்டோமோ என்ற எண்ணம் பலருக்கும் எழும்.

2000ம் ஆண்டு இந்திய கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான தேசிய அறக்கட்டளை, (INTACH) ரகுராஜ்பூரை இந்தியாவின் முதல் பாரம்பரியக் கிராமமாக அறிவித்தது. இதன் மூலம் இக்கிராமம் மேலும் பிரபலமடைந்தது. பட்டசித்ரா ஓவியங்களை வாங்குவதற்காவும், கலைஞர்கள் ஓவியம் வரைவதைத் நேரடியாகப் பார்க்கவும் சுற்றுலா பயணிகளும், கலை ஆர்வலர்களும் தொடர்ச்சியாக ரகுராஜ்பூருக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

Tags: RaghurajpurIndigenousCraftsHeritageArtisanIndiaodishavillageculture
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவை திருப்திபடுத்திய 2 சர்வாதிகாரிகள் – அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் டாய்லெட் பேப்பரா?

Next Post

காரைக்காலில் இன்று பாஜக பொதுக்கூட்டம் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கிறார்!

Related News

திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயிலில் பக்தர்கள் புடைசூழ பங்குனி தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது!

கந்தசாமி கோயிலில் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு சாமி தரிசனம்!

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 3 மடங்கு குற்றங்கள் அதிகரிப்பு – சௌமியா அன்புமணி

ஆர்ஷவித்யா சமாஜத்தின் தமிழ்நாடு செயல்பாட்டு மையம் தொடக்கம்!

ரூ.84 சொத்து மதிப்புடன் தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்!

பேனர் வைப்பது தொடர்பாக பொதுமக்களுடன் திமுக பெண் கவுன்சிலரின் தந்தை, கணவர் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளரை வரவேற்க பட்டாசு வெடித்தபோது- பெண் காயம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை!

ஆற்காடு அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.சுகுமார் தீவிர பரப்புரை!

ஈரோடு:பண்ணாரி அம்மன் கோயிலில் குண்டம் திருவிழா கோலாகலம்!

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பிட்சாடனர் வீதி உலா- திரளான பக்தர்கள் சாமி தரிசனம!

இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் சென்று வாக்கு சேகரித்த JCM !

என் குடுமபம் அதிமுக தொண்டர்கள் தான் – முன்னாள் அமைச்சர் தங்கமணி உருக்கம்!

கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை – வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை!

50 அடி உயரத்தில் இருந்து கடலில் விழுந்த சுற்றுலா பயணி!

தேநீர் பையால் ஆபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies