வீடுகள்தோறும் ஓவியங்கள்..வீதிகள்தோறும் கலைப்பொருட்கள்.. சிறப்பு தொகுப்பு
Feb 14, 2026, 04:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வீடுகள்தோறும் ஓவியங்கள்..வீதிகள்தோறும் கலைப்பொருட்கள்.. சிறப்பு தொகுப்பு

Manikandan by Manikandan
Feb 13, 2026, 09:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒடிசாவில் உள்ள ஒரு ஒட்டுமொத்த கிராமமே இந்திய ஓவியக்கலைக்கும், கைவினை கலைக்கும் சான்றாக விளங்கி வருகிறது. அந்த கிராமம் குறித்து இந்த செய்தித்தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

பார்க்கும் இடமெல்லாம் ஓவியங்கள்…வீதிகள்தோறும் கைவினைப் பொருட்கள்…வீடுகள்தோறும் அழகிய அலங்காரங்கள்…

இதுதான், இந்தியாவின் பாரம்பரிய கைவினைக் கிராமமான ரகுராஜ்பூர்.

ஓடிசாவின் புரி நகரில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும், புவனேஸ்வரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள ரகுராஜ்பூரில் மொத்தமே 150 வீடுகள்தான் உள்ளன. ஆனால், அவை ஒவ்வொன்றிலுமே குறைந்தது 2 கைவினைக் கலைஞர்களும், ஓவியர்களும் இருக்கின்றனர்.

ரகுராஜ்பூர் கிராமத்தின் ஆன்மாவாக பட்டசித்ரா ஓவியங்கள் விளங்குகின்றன. ‘பட்டா’ என்றால் துணி. ‘சித்ரா’ என்றால் ஓவியம். பாரம்பரிய துணிகளில் இயற்கை வண்ணங்களை கொண்டு சித்திரங்களை வரைவதால், இந்த வகை ஓவியங்கள் பட்டசித்ரா என அழைக்கப்படுகின்றன.

புரி ஜெகன்நாதர் குறித்தும், இந்துப் புராணங்கள் பற்றியும், மகாபாரதம் ராமாயணம் போன்ற இதிகாசங்கள் குறித்தும் பட்டசித்ரா ஓவியங்கள் தீட்டப்படுகின்றன.


ஓவியங்களை தவிர்த்து, பாரம்பரிய முகமூடிகள், பனை ஓலை வேலைப்பாடுகள், காகிதக் கூழ் பொம்மைகள், மரச்சிற்பங்கள் உள்ளிட்டவைக்கும் ரகுராஜ்பூர் புகழ்பெற்று விளங்குகிறது. அத்துடன், புகழ்பெற்ற ஒடிசி நடனக் கலைஞரான கேளுச்சரண மகோபாத்திரா (Kelucharan Mohapatra) பிறந்த ஊர் என்ற பெருமையும் இக்கிராமத்திற்கு உண்டு.

வீடுகள்தோறும் ஓவியர்களும், கைவினைக் கலைஞர்களும் உள்ளதால், ஒட்டுமொத்த கிராமமே ஒரு கலைக்கூடம் போல காட்சியளிக்கிறது. இந்த கிராமத்திற்குள் நுழைந்தால், ஏதோ திறந்தவெளி அருங்காட்சியகத்திற்குள் நுழைந்துவிட்டோமோ என்ற எண்ணம் பலருக்கும் எழும்.

2000ம் ஆண்டு இந்திய கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான தேசிய அறக்கட்டளை, (INTACH) ரகுராஜ்பூரை இந்தியாவின் முதல் பாரம்பரியக் கிராமமாக அறிவித்தது. இதன் மூலம் இக்கிராமம் மேலும் பிரபலமடைந்தது. பட்டசித்ரா ஓவியங்களை வாங்குவதற்காவும், கலைஞர்கள் ஓவியம் வரைவதைத் நேரடியாகப் பார்க்கவும் சுற்றுலா பயணிகளும், கலை ஆர்வலர்களும் தொடர்ச்சியாக ரகுராஜ்பூருக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

Tags: RaghurajpurIndigenousCraftsHeritageArtisanIndiaodishavillageculture
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவை திருப்திபடுத்திய 2 சர்வாதிகாரிகள் – அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் டாய்லெட் பேப்பரா?

Related News

அமெரிக்காவை திருப்திபடுத்திய 2 சர்வாதிகாரிகள் – அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் டாய்லெட் பேப்பரா?

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நிறைவு!

கரூர் சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள் விஜய் கூட்டத்தில் அடுத்த மரணம்!

சேவா தீர்த்தம் கட்டடத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி!

தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமங்களின் நட்சத்திர கலைவிழா

Load More

அண்மைச் செய்திகள்

வீடுகள்தோறும் ஓவியங்கள்..வீதிகள்தோறும் கலைப்பொருட்கள்.. சிறப்பு தொகுப்பு

சிறந்த திரைப்படங்களுக்கான விருதுகள் வழங்கும் விழா..ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், கடல் கன்னி ஆகிய படங்கள் தேர்வு

சட்டம்-ஒழுங்கு தான் திமுக ஆட்சியில் அவுட் ஆப் கண்ட்ரோல் – தவெக தலைவர் விஜய்

வங்கதேச தேர்தலில் வெற்றி பெற்ற தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

நாமக்கல் அருகே அடிப்படை வசதியின்றி தவிக்கும் சமத்துவபுரம்!

வங்கிக்கணக்கில் குறைந்த பட்ச தொகையை பராமரிக்காவிட்டல் அபராதம் விதிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும் – லோக்சபா குழு பரிந்துரை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இபிஎஸ் குடும்பத்தினருடன் சாமி தரிசனம்!

மகளிர் உரிமை தொகை திட்டத்தை 2 ஆண்டுகள் தாமதப்படுத்தியது ஏன்? – தமிழிசை கேள்வி!

இருதரப்பு மோதலை தடுக்க வந்தவர்கள் மீது தாக்குதல்!

வைகை ஆற்றில் மணல் அள்ளக்கூடாது – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies