காலமுறை ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், பாடை கட்டி, ஒப்பாரி வைத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது, மகளிர் உரிமைத் தொகையை உயர்த்தி வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர்.
















