தென்காசி நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் பாஜக கவுன்சிலருக்கும், சுயேட்சை கவுன்சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
தென்காசி மங்கம்மா சாலை பகுதியில், தனியார் சார்பில் வீட்டு மனை பிரிப்பதற்கு, நகராட்சிக்கு பணம் செலுத்தாமலேயே ஒப்புதல் வழங்குவதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இதுதொடர்பாக பாஜக கவுன்சிலர் சங்கர சுப்பிரமணியனும், நகரமைப்பு அலுவலர் அப்துல் காதரும் பேசிக்கொண்டிருந்தபோது சுயேச்சை கவுன்சிலர் முகமது ராஜப்பா இடைமறித்து சங்கர சுப்பிரமணியனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து பாஜக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
















