அரசியலமைப்புச் சட்டத்தால் நியமிக்கப்பட்ட ஆளுநரை திமுக தொடர்ந்து அவமதித்து வருவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை குண்டு வெடிப்பு நாள் மறக்க முடியாத கருப்பு நாள் என்றும், அது கோவையின் வளர்ச்சிக்கு எதிரான நாள் என்றும் கூறினார்.
பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி என்றும், அதனை மறைக்கவே ரூ.5000 வழங்கி திசை திருப்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தவெகவுக்கு 30% வாக்குகள் உள்ளதாக கூறும் விஜய்யால் ஒரு சதவீத வாக்குகள் கூட பெற முடியாது என்றும் எல்.முருகன் தெரிவித்தார்.
















