சிவகங்கையில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு!
Jul 22, 2026, 12:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிவகங்கையில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 15, 2026, 06:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கையில் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் இருவர் மயக்கமடைந்தனர்.

காலமுறை ஊதியம் வழங்குதல், காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் சிவகங்கையில் கடந்த 12 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆட்சியர் அலுவலகம் எதிரே 500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் திரண்டு, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் செல்ல முயன்றனர். அப்போது, பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் இந்த ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்ததால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

இதில், அங்கன்வாடி பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் உட்பட இருவர் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து, மயக்கமடைந்த அங்கன்வாடி ஊழியர்களை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அங்கு மருத்துவர்கள் இல்லாததால் செவிலியர்களே சிகிச்சை அளித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் இருவரும் அனுப்பி வைக்கப்பட்டனர். மயக்கமடைந்த ஊழியர்களுக்கு சிகிச்சை அளிக்க கூட மருத்துவர்கள் இல்லாமல் அரசு மருத்துவமனை செயல்படுவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல், திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தேனியில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக செல்ல 800-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் முயன்றனர். இதனையடுத்து போலீசார் அனுமதி மறுத்த நிலையில், சாலை ஓரத்தில் அமர்ந்து முழக்கங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.

ஈரோட்டில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, திமுகவுக்கு எதிராக ஊர்வலகமாகவும் சென்று எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டார் பேரணியில் ஈடுபட முயன்றனர். அப்பொழுது காவல்துறையினர் அவர்களுக்கு அனுமதி மறுத்ததால், அந்த இடத்திலேயே நின்றபடி அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

Tags: sivagangaAnganwadi workers protestAnganwadi workers clash with policeAnganwadi Workers' Association
ShareTweetSendShare
Previous Post

அரசியலமைப்புச் சட்டத்தால் நியமிக்கப்பட்ட ஆளுநரை திமுக தொடர்ந்து அவமதித்து வருகிறது – எல்.முருகன்

Next Post

இலவச வீட்டுமனைப் பட்டா திட்டத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பெற்ற 7 பட்டாக்கள் – ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு!

Related News

ஆழ்ந்த ஒத்துழைப்பின் மூலமே பன்முகத்தன்மையை உருவாக்க முடியும் – எஸ்.ஜெய்சங்கர்

இன்றைய தங்கம் விலை!

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் படிபூஜை – பக்தர்கள் வழிபாடு!

சிக்கிம் நீா்மின் திட்ட சுரங்கப்பாதையில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி போராட்டம் தொடர்பாக முன்பே சுற்றறிக்கை வெளியிட்ட அமெரிக்க தூதரகம்!

ஆவின் பால் தட்டுப்பாடும் தவெக அரசின் அலட்சியமும் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

ராகுல் காந்தியின் மாறுபட்ட நிலைப்பாடு – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் குற்றச்சாட்டு!

பழநி கோயில் நில மோசடி விவகாரம்; சிபிசிஐடி கிடுக்குப்பிடி

பிரதமரின் வீடு அருகே போராட்டம்; ராகுல்காந்தி, அகிலேஷ் யாதவ் கைது

கொசு தொல்லைக்கு வருகிறது நிரந்தர தீர்வு : ஏஐ மைக்ரோ டிரோன் தயார் – சிறப்பு தொகுப்பு!

காவல்துறையினர் கண்ணியம் தவறக் கூடாது – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தின் நீர் உரிமையை பாதுகாக்க அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து போராடுவோம் – IJK கட்சி தலைவர் ரவி பச்சமுத்து

சென்னையில் ஓய்வு பெற்ற போக்குவரத்துத்துறை அதிகாரி உள்ளிட்டோரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை – ஒரு வாரத்தில் 358 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies