ஆளுநர் குறித்து அவதூறாகப் பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டு 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை கொடுங்கையூரில் கடந்த 2023இல் நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக மேடை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி விமர்சனத்திற்கு உள்ளானது. எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து கொடுங்கையூர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவர் ஜாமினில் வெளியே வந்தார்.
இது தொடர்பான வழக்கில் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டு 3 மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், இவ்வழக்கில் அவருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம், தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய ஒரு மாதம் அவகாசமும் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
















