காலமுறை ஊதியம் வழங்கக்கோரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அங்கன்வாடி ஊழியர்கள் 12வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணிக்கொடை ஐந்து லட்சம் ரூபாயை வழங்க வேண்டும், கால முறை ஊதியத்தை வழங்க வேண்டும்,
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 12வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய அங்கன்வாடி ஊழியர்கள் கடந்த 4 ஆண்டுகளாக வெயில் காலம் கண்ணில் புலப்படவில்லையா? எனவும் தேர்தல் நெருங்கும் வேளையில் 2000 ரூபாய் வழங்குவது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினர்.
















