பாகிஸ்தானுக்கு எதிரான டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில், பாகிஸ்தானுக்கு இந்தியா மனரீதியான அழுத்தத்தை கொடுக்கும் என கிரிக்கெட் வியூக வகுப்பாளர் பாஸ்கி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியது
இந்தியா 180 அடித்தால் பாகிஸ்தான் பேட்டிங்கில் சொதப்புவார்கள் என்றும் உஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சை டென்னிஸ் பிளேயர் போல எதிர்கொள்ள வேண்டும் என கூறினார்
பாகிஸ்தான் பயத்திலே உளறிக்கொண்டு இருக்கிறது என தெரிவித்த அவர் குல்தீப் யாதவ் பாகிஸ்தானின் பாதி அணியை வீழ்த்திவிடுவார் எனக் கூறினார்
மேலும் சிவம் தூபேவை பந்துவீச்சில் கொண்டு வரவேண்டும் எனவும் மனரீதியான அழுத்தத்தை கொண்டு வருவதற்கு இந்தியா முயற்சிக்கும்
டாஸ் வென்றால் இந்தியா பேட்டிங் எடுத்து விளையாடும் என்றும்
இந்தியாவின் பேட்டிங் மிகவும் தரமாக உள்ளது எனவும் தெரிவித்தார்
இந்தியா இளம் வீரர்களை கண்டு பாகிஸ்தானுக்கு தான் பயம் அதிகம் என கிரிக்கெட் வியூக வகுப்பாளர் பாஸ்கி தெரிவித்துள்ளார்
FULL VIDEO LINK : https://youtu.be/U3WCfOwh0ek
















