உக்ரைன் மட்டுமே தொடா்ந்து சமரசம் செய்து கொள்ள வேண்டும் என அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதாக, உக்ரைன் அதிபா் ஜெலன்ஸ்கி அதிருப்தி தெரிவித்துள்ளாா்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மியூனிச் பாதுகாப்பு மாநாட்டில் உக்ரைன் அதிபா் ஜெலன்ஸ்கி பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், பேச்சுவாா்த்தை ஆக்கப்பூா்வமாக அமைய வேண்டும் என்பதே உக்ரைனின் விருப்பம் என்றார்.
அதேநேரம் இந்த விவகாரத்தில் அமெரிக்கா தரப்பில் இருந்து உக்ரைனுக்குச் சற்றே அழுத்தம் கொடுக்கப்படுவதை மறுக்க முடியாது எனவும் ஜெலன்ஸ்கி கூறினார்.
















