ஆந்திரா வந்துள்ள பில் கேட்ஸ் அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண் ஆகியோரை சந்தித்து பேசினார்.
மைக்ரோசாப்ட் நிறுவனரும், கேட்ஸ் அறக்கட்டளை தலைவருமான பில் கேட்ஸ், ஆந்திரப் பிரதேச மாநிலச் செயலகத்திற்கு வருகை தந்துள்ளார்.
ஆந்திராவின் தொழில்நுட்பம் மற்றும் சுகாதார வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில் இந்தப் பயணம் அமைந்துள்ளது.

ஆந்திராவை 2047-க்குள் முதன்மை மாநிலமாக மாற்றும் ‘சுவர்ணாந்திரா 2047’ தொலைநோக்குப் பார்வையைப் பில் கேட்ஸிடம் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு விளக்கினார்.
















