மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான கேள்விகளை பாஜகவிடம் காவல்துறை எழுப்பியுள்ளது.
சட்டசபை தேர்தலையொட்டி மதுரை மாவட்டம், மண்டேலா நகரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்திற்கு உரிய அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்கக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாஜகவினர் மனு அளித்தனர்.
அப்போது தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி மாவட்ட காவல்துறை சார்பில் கேள்விகள் எழுப்பட்டன.
கூட்டம் நடைபெறும் இடத்தின் உரிமையாளர் விவரங்கள், பார்வையாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், வாகனம் நிறுத்துமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா?
உள்ளிட்ட கேள்விகளை முன்வைத்த காவல்துறை தங்களது பதிலை எழுத்துப்பூர்வமாக சமர்பிக்குமாறு பாஜகவினரிடம் தெரிவித்தனர்.
இதற்கிடையே பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு செய்தார். மண்டேலா நகரில் மார்ச் 1ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
பிரதமர் மோடி பங்கேற்கும் இந்த கூட்டத்திற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கூட்டம் நடைபெறும் இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் நேரில் பார்வையிட்டார்.
அப்போது அவருடன் பாஜக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.
















