புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே குளத்தூர் நாயக்கர்பட்டி பிடாரியம்மன் கோயில் விழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி விமரிசையாக நடைபெற்றது.
கந்தர்வக்கோட்டை வட்டாட்சியர் ரமேஷ் போட்டியை தொடங்கி வைத்தார். மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 12 காளைகள் களமிறக்கப்பட்டன. ஒரு குழுவிற்கு 9 வீரர்கள் என 12 குழுவில் 108 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று காளைகளை பிடிக்க முயற்சி செய்தனர். ஒரு காளைக்கு 20 நிமிடங்கள் நேரம் ஒதுக்கப்பட்டு போட்டி நடைபெற்றது.
குளத்தூர் நாயக்கர்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஆராவாரத்துடன் மஞ்சுவிரட்டு போட்டியை கண்டு ரசித்தனர்.
















