சட்டப்பேரவையில் பட்ஜெட் என்ற பெயரில் திமுக அரசு காதுகுத்து விழாவை நடத்தியுள்ளதாக விமர்சித்து, அதிமுக உறுப்பினர்கள் துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.
திமுக அரசு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், அதனை விமர்சித்து பிரசுரங்களை வழங்கினர்.
அதில், கடந்த நான்கரை ஆண்டுகளாக பட்ஜெட் என்ற பெயரில் தமிழக மக்களுக்கு மாபெரும் காது குத்து விழா, இந்த ஆண்டும் வெகு விமர்சையாக அரங்கேறுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
குறிப்பாக, சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் உள்ளிட்ட அனைத்திற்கும் மொய் வைக்கலாம் என்றும் அந்த துண்டு பிரசுரத்தில் அச்சடிக்கப்பட்டிருந்தது.
















