தருமபுரியில், மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவிய வதந்தி காரணமாக வங்கியில் பெண்கள் கூட்டம் அலைமோதியது.
மகளிர் உரிமை திட்டத்தின்கீழ் வங்கியில் செலுத்தப்பட்ட நிதியை உடனடியாக எடுக்காவிட்டால் பணத்தை இழக்க நேரிடும் என்றும், இன்று எடுத்துக் கொள்ளாவிட்டால் பணம் மீண்டும் அரசுக்கே சென்று விடும் என்றும் தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் தகவல் பரவியது.
இதனால் அச்சமடைந்த பெண்கள், அரூர் மத்திய கூட்டுறவு வங்கியில் குவிந்தனர். இதனால் வங்கியை சுற்றி கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், மகளிர் உரிமை திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும், எப்போது வேண்டுமானாலும் பணம் எடுத்துக் கொள்ளலாம் எனவும் வங்கி நிர்வாகம் தெளிவுப்படுத்தியது.
















