திமுக – காங்கிரஸ் கூட்டணி குறித்து ராகுல் காந்தியே இறுதி முடிவு எடுப்பார் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்,
சென்னை முகப்பேரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தல் போலவே சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும் என தெரிவித்தார். இரண்டாம் கட்ட தலைவர்களின் கருத்து காங்கிரஸின் கருத்தல்ல என்றும், பொதுவெளியில் கூட்டணி பற்றி பேச வேண்டாம் என்றும் கூறினார்.
கூட்டணி குறித்து ராகுல்காந்திதான் இறுதி முடிவை எடுப்பார் என்றும், கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவிக்கும் கருத்துகள், அவர்களின் தனிப்பட்ட கருத்துகளே என்றும், தேர்தல் பேச்சுவார்த்தைக்கு திமுக அழைக்கும் என காத்திருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
















