தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மாதம் 9 ஆம் தேதி இடைக்கால தடை விதித்திருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு வக்பு வாரியம் மேல்முறையீடு செய்தது.
இந்த மனு மீதான விசாரணையில் ஆஜரான தமிழ்நாடு வக்பு வாரிய தரப்பு, உரிய சட்ட விதிகளின்படி 8 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.
மேலும் 3 பேர் நியமனம் செய்யப்பட வேண்டி உள்ளதால், இதனை அடிப்படையாகக் கொண்டு தடை விதிக்க முடியாது என வாதம் முன் வைக்கப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
மேலும் தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு நியமனம் செய்யப்பட வேண்டிய மேலும் 3 உறுப்பினர்கள் யார்? என்பதை அடுத்த விசாரணையில் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
















