இந்தியா – அமெரிக்கா இடையிலான பாக்ஸ் சிலிக்கா ஒப்பந்தத்திற்கு கூகுள் மற்றும் ஆல்பாபெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற பாக்ஸ் சிலிக்கா ஒப்பந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்த நடவடிக்கை தொழில்நுட்ப ஒத்துழைப்பில் பல ஆண்டுகளுக்கு வலுவான அடித்தளத்தை அமைக்கும் என்று குறிப்பிட்டார்.
பாக்ஸ் சிலிக்கா விநியோகச் சங்கிலிகளின் பாதுகாப்பை உறுதி செய்கிறது என்றும், முக்கிய தொழில்நுட்பங்களில் அதிக வணிக ஒத்துழைப்பை ஊக்குவிக்கிறது என்றும் அவர் கூறினார்.
















