சென்னை உயர்நீதிமன்ற உத்தரவால் திமுக அரசின் ஊழல் சாம்ராஜ்யம் உடைந்து நொறுங்கும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நகராட்சி நிர்வாகத்துறை நியமன ஊழல் குறித்து வழக்குப்பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது வரவேற்கத்தக்கது எனவும்
நீதிமன்ற உத்தரவுப்படி கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை முன்வர வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகம் மட்டுமின்றி கனிமவளம், வேளாண், டாஸ்மாக் உள்ளிட்ட துறைகளிலும் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக அன்புமணி குற்றம்சாட்டி உள்ளார்.
ஊழல் மூலம் குவித்து வைத்திருக்கும் பணத்தைக் கொண்டுதான் அனைவரையும் விலைக்கு வாங்குவது உள்ளிட்ட அரசியலை திமுக செய்து வருவதாகவும்
உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மூலம் திமுக அரசின் ஊழல் சாம்ராஜ்யம் உடைந்து நொறுங்கும் எனவும் அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
















