இடைக்கால தலைவர் முகமது யூனுஸின் தன்னிச்சையான செயல்பாட்டால் இந்தியா – பங்களாதேஷ் இடையே உறவில் விரிசல் விழுந்தது. தற்போது அங்கு புதிய ஆட்சி மலர்ந்திருக்கும் நிலையில், இருநாடுகளுக்கும் இடையேயான உறவும் துளிர்விட தொடங்கியுள்ளது.
2009 ஆம் ஆண்டு ஹசீனா பிரதமராக பொறுப்பேற்ற பின்னர், பங்களாதேஷ் உடனான இருதரப்பு உறவுகள் பின்னி பிணைந்திருந்தன.. கடந்த சில ஆண்டுகளில் சர்வாதிகாரியாக மாறிய ஹசீனா ஆட்சியை இந்தியா ஆதரிப்பதாக பங்களாதேஷில் விஷம கருத்துகள் பரப்பப்பட்டன. 2024 ஜூலை-ஆகஸ்ட் மாத, போராட்டத்திற்குப் பிறகு இந்தியாவிற்கும், பங்களாதேஷிற்கும் இடையேயான உறவுகள் மிகவும் மோசமடைந்தன. இதன் விளைவாக அவாமி லீக் அரசு கவிழ்ந்து, அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகினார்.
இடைக்கால தலைவராக பொறுபேற்ற முகமது யூனுஷ் இந்தியாவை விரோதியாக பார்த்தார்… இந்தியாவின் 7 சகோதரிகள் என வடகிழக்கு மாநிலங்களைப் பற்றி அடிக்கடி பேசி இருதரப்பு உறவில் விரிசலை ஏற்படுத்தினார்… முகமது யூனுஸ் ஆட்சியில் இந்தியாவைத் தூண்டியவர்களும், இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளும் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அந்த நேரத்தில் பங்களாதேஷில் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் உச்சத்தை எட்டியது. இதன் விளைவாக போராட்டங்கள், ஆட்சி கவிழ்ப்பு, வன்முறை, இந்துக்கள் படுகொலை என வெறியாட்டங்கள் நீள, இருநாடுகளுக்கு இடையேயான உறவுகள் புதிய வீழ்ச்சியை அடைந்தன.
இந்திய தூதரகங்களுக்கு கடுமையான அச்சுறுத்தல்கள் இருந்ததால், டாக்காவில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையம் மூடப்பட்டது… 2025ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி முதல் பங்களாதேஷில் விசா சேவைகளை நிறுத்தி வைக்கத் தொடங்கியது . பங்களாதேஷ் முழுவதும் விசா சேவைகள் நிறுத்தப்பட்டது அதுவே முதல் முறை.
பிப்ரவரி 12 தேர்தலுக்குப் பிறகு பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி தலைவர் தாரிக் ரஹ்மான் பிரதமரான நிலையில் , நீண்ட வரலாற்றைக் கொண்ட உறவுகளை சரிசெய்ய இரு தரப்பினரும் பாடுபடுவார்கள் என்பதற்கான போதுமான அறிகுறிகள் உள்ளன.
பங்களாதேஷில் அனைத்து விசா சேவைகளையும் இந்தியா மீண்டும் வழங்கும் என்று பங்களாதேஷில் உள்ள மூத்த இந்திய தூதரக அதிகாரி அனிருத்தா தாஸ் ஒருவர் பங்களாதேஷ் ஊடகங்களுக்கு தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்திருப்பது முக்கிய சமிக்ஞையாக பார்க்கப்படுகிறது.
மருத்துவ மற்றும் இரட்டை நுழைவு விசாக்கள் தற்போது வழங்கப்பட்டு வருவதாகவும், பயண விசாக்கள் உள்பட பிற விசா சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான பணிகள் நடந்து வருவதாக BDNews மேற்கோள் காட்டியுள்ளது. இதன் மூலம் விரைவில் இருதரப்பு உறவு துளிர்விடும் என்பது சர்வதேச நிபுணர்களின் கணிப்பு….
















