பங்களாதேஷ்-க்கு மீண்டும் விசா சேவை.. இந்தியா - பங்களாதேஷ் இடையே துளிர்விடும் உறவு -சிறப்பு தொகுப்பு
Apr 16, 2026, 01:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பங்களாதேஷ்-க்கு மீண்டும் விசா சேவை.. இந்தியா – பங்களாதேஷ் இடையே துளிர்விடும் உறவு -சிறப்பு தொகுப்பு

Manikandan by Manikandan
Feb 20, 2026, 09:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இடைக்கால தலைவர் முகமது யூனுஸின் தன்னிச்சையான செயல்பாட்டால் இந்தியா – பங்களாதேஷ் இடையே உறவில் விரிசல் விழுந்தது. தற்போது அங்கு புதிய ஆட்சி மலர்ந்திருக்கும் நிலையில், இருநாடுகளுக்கும் இடையேயான உறவும் துளிர்விட தொடங்கியுள்ளது.

2009 ஆம் ஆண்டு ஹசீனா பிரதமராக பொறுப்பேற்ற பின்னர், பங்களாதேஷ் உடனான இருதரப்பு உறவுகள் பின்னி பிணைந்திருந்தன.. கடந்த சில ஆண்டுகளில் சர்வாதிகாரியாக மாறிய ஹசீனா ஆட்சியை இந்தியா ஆதரிப்பதாக பங்களாதேஷில் விஷம கருத்துகள் பரப்பப்பட்டன. 2024 ஜூலை-ஆகஸ்ட் மாத, போராட்டத்திற்குப் பிறகு இந்தியாவிற்கும், பங்களாதேஷிற்கும் இடையேயான உறவுகள் மிகவும் மோசமடைந்தன. இதன் விளைவாக அவாமி லீக் அரசு கவிழ்ந்து, அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகினார்.

இடைக்கால தலைவராக பொறுபேற்ற முகமது யூனுஷ் இந்தியாவை விரோதியாக பார்த்தார்… இந்தியாவின் 7 சகோதரிகள் என வடகிழக்கு மாநிலங்களைப் பற்றி அடிக்கடி பேசி இருதரப்பு உறவில் விரிசலை ஏற்படுத்தினார்… முகமது யூனுஸ் ஆட்சியில் இந்தியாவைத் தூண்டியவர்களும், இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளும் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அந்த நேரத்தில் பங்களாதேஷில் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் உச்சத்தை எட்டியது. இதன் விளைவாக போராட்டங்கள், ஆட்சி கவிழ்ப்பு, வன்முறை, இந்துக்கள் படுகொலை என வெறியாட்டங்கள் நீள, இருநாடுகளுக்கு இடையேயான உறவுகள் புதிய வீழ்ச்சியை அடைந்தன.

இந்திய தூதரகங்களுக்கு கடுமையான அச்சுறுத்தல்கள் இருந்ததால், டாக்காவில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையம் மூடப்பட்டது… 2025ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி முதல் பங்களாதேஷில் விசா சேவைகளை நிறுத்தி வைக்கத் தொடங்கியது . பங்களாதேஷ் முழுவதும் விசா சேவைகள் நிறுத்தப்பட்டது அதுவே முதல் முறை.

பிப்ரவரி 12 தேர்தலுக்குப் பிறகு பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி தலைவர் தாரிக் ரஹ்மான் பிரதமரான நிலையில் , நீண்ட வரலாற்றைக் கொண்ட உறவுகளை சரிசெய்ய இரு தரப்பினரும் பாடுபடுவார்கள் என்பதற்கான போதுமான அறிகுறிகள் உள்ளன.

பங்களாதேஷில் அனைத்து விசா சேவைகளையும் இந்தியா மீண்டும் வழங்கும் என்று பங்களாதேஷில் உள்ள மூத்த இந்திய தூதரக அதிகாரி அனிருத்தா தாஸ் ஒருவர் பங்களாதேஷ் ஊடகங்களுக்கு தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்திருப்பது முக்கிய சமிக்ஞையாக பார்க்கப்படுகிறது.

மருத்துவ மற்றும் இரட்டை நுழைவு விசாக்கள் தற்போது வழங்கப்பட்டு வருவதாகவும், பயண விசாக்கள் உள்பட பிற விசா சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான பணிகள் நடந்து வருவதாக BDNews மேற்கோள் காட்டியுள்ளது. இதன் மூலம் விரைவில் இருதரப்பு உறவு துளிர்விடும் என்பது சர்வதேச நிபுணர்களின் கணிப்பு….

Tags: IndiaBangladeshIndia-BangladeshMuhammad Yunusrelationsinterim leader Muhammad Yunus
ShareTweetSendShare
Previous Post

மக்கள் வரிப்பணம் வீண் – அஞ்சுகம் பூங்கா பெயரளவுக்கு சீரமைப்பு பொதுமக்கள் கொந்தளிப்பு! – சிறப்பு தொகுப்பு

Next Post

ருசிக்கு மட்டுமல்ல வரி ஏய்ப்பிலும் பிரபலமான பிரியாணி – விசாரணையில் திடுக்..ரூ.70,000 கோடி வரிஏய்ப்பு – சிறப்பு தொகுப்பு

Related News

திமுக ஆட்சியில் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர் – டிடிவி தினகரன்

மனிதவளத்துறை சார்பில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் – நிறைவேற்றப்படவில்லை என தகவல்!

ஊழல் காரணமாக திமுகவை மக்கள் நிராகரிப்பார்கள் – ஜி.கே.வாசன் உறுதி!

தவெக தலைவர் விஜய் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

8000 கொடுத்தாலும், 8 லட்சம் கொடுத்தாலும் திமுக தோல்வி அடைவது உறுதி – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறுதி!

தமிழகத்தின் கடன்சுமை ரூ.10 லட்சம் கோடியை தாண்டியுள்ளது – சரத்குமார் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

என்டிஏ ஆட்சி அமைந்ததும் திருச்செந்தூர் கோயிலில் உள்ளூர் மக்கள் சாமி தரிசனம் செய்ய 2 மணி நேரம் ஒதுக்கப்படும் – அண்ணாமலை உறுதி!

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு – மல்லிகார்ஜூன கார்கே

சமூகத்திற்காக வாழ்ந்தவர்கள் மகான்கள் – பிரதமர் மோடி புகழாரம்!

மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவியிடம் கஞ்சா கும்பல் அத்துமீறல் – இபிஎஸ் கண்டனம்!

திருச்செந்தூர் NDA வேட்பாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்!

கோவை மருத்துவமனையில் வானதி சீனிவாசன் – நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார் டெல்லி முதல்வர் ரேகா குப்தா!

மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஆதரவு – பிரதமருக்கு பிரதீபா பாட்டில் கடிதம்!

ஈரான் உடனான போர் முடிவுக்கு வரும் தருவாயில் உள்ளது – ட்ரம்ப் அறிவிப்பு!

வேட்பு மனுவில் உதயநிதி தெரிவித்துள்ள சொத்து விவரம் குறித்த வழக்கு – வருமான வரித்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவி போதை நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் – அண்ணாமலை கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies