பங்களாதேஷ்-க்கு மீண்டும் விசா சேவை.. இந்தியா - பங்களாதேஷ் இடையே துளிர்விடும் உறவு -சிறப்பு தொகுப்பு
Jul 31, 2026, 01:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பங்களாதேஷ்-க்கு மீண்டும் விசா சேவை.. இந்தியா – பங்களாதேஷ் இடையே துளிர்விடும் உறவு -சிறப்பு தொகுப்பு

Manikandan by Manikandan
Feb 20, 2026, 09:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இடைக்கால தலைவர் முகமது யூனுஸின் தன்னிச்சையான செயல்பாட்டால் இந்தியா – பங்களாதேஷ் இடையே உறவில் விரிசல் விழுந்தது. தற்போது அங்கு புதிய ஆட்சி மலர்ந்திருக்கும் நிலையில், இருநாடுகளுக்கும் இடையேயான உறவும் துளிர்விட தொடங்கியுள்ளது.

2009 ஆம் ஆண்டு ஹசீனா பிரதமராக பொறுப்பேற்ற பின்னர், பங்களாதேஷ் உடனான இருதரப்பு உறவுகள் பின்னி பிணைந்திருந்தன.. கடந்த சில ஆண்டுகளில் சர்வாதிகாரியாக மாறிய ஹசீனா ஆட்சியை இந்தியா ஆதரிப்பதாக பங்களாதேஷில் விஷம கருத்துகள் பரப்பப்பட்டன. 2024 ஜூலை-ஆகஸ்ட் மாத, போராட்டத்திற்குப் பிறகு இந்தியாவிற்கும், பங்களாதேஷிற்கும் இடையேயான உறவுகள் மிகவும் மோசமடைந்தன. இதன் விளைவாக அவாமி லீக் அரசு கவிழ்ந்து, அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகினார்.

இடைக்கால தலைவராக பொறுபேற்ற முகமது யூனுஷ் இந்தியாவை விரோதியாக பார்த்தார்… இந்தியாவின் 7 சகோதரிகள் என வடகிழக்கு மாநிலங்களைப் பற்றி அடிக்கடி பேசி இருதரப்பு உறவில் விரிசலை ஏற்படுத்தினார்… முகமது யூனுஸ் ஆட்சியில் இந்தியாவைத் தூண்டியவர்களும், இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளும் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அந்த நேரத்தில் பங்களாதேஷில் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் உச்சத்தை எட்டியது. இதன் விளைவாக போராட்டங்கள், ஆட்சி கவிழ்ப்பு, வன்முறை, இந்துக்கள் படுகொலை என வெறியாட்டங்கள் நீள, இருநாடுகளுக்கு இடையேயான உறவுகள் புதிய வீழ்ச்சியை அடைந்தன.

இந்திய தூதரகங்களுக்கு கடுமையான அச்சுறுத்தல்கள் இருந்ததால், டாக்காவில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையம் மூடப்பட்டது… 2025ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி முதல் பங்களாதேஷில் விசா சேவைகளை நிறுத்தி வைக்கத் தொடங்கியது . பங்களாதேஷ் முழுவதும் விசா சேவைகள் நிறுத்தப்பட்டது அதுவே முதல் முறை.

பிப்ரவரி 12 தேர்தலுக்குப் பிறகு பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி தலைவர் தாரிக் ரஹ்மான் பிரதமரான நிலையில் , நீண்ட வரலாற்றைக் கொண்ட உறவுகளை சரிசெய்ய இரு தரப்பினரும் பாடுபடுவார்கள் என்பதற்கான போதுமான அறிகுறிகள் உள்ளன.

பங்களாதேஷில் அனைத்து விசா சேவைகளையும் இந்தியா மீண்டும் வழங்கும் என்று பங்களாதேஷில் உள்ள மூத்த இந்திய தூதரக அதிகாரி அனிருத்தா தாஸ் ஒருவர் பங்களாதேஷ் ஊடகங்களுக்கு தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்திருப்பது முக்கிய சமிக்ஞையாக பார்க்கப்படுகிறது.

மருத்துவ மற்றும் இரட்டை நுழைவு விசாக்கள் தற்போது வழங்கப்பட்டு வருவதாகவும், பயண விசாக்கள் உள்பட பிற விசா சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான பணிகள் நடந்து வருவதாக BDNews மேற்கோள் காட்டியுள்ளது. இதன் மூலம் விரைவில் இருதரப்பு உறவு துளிர்விடும் என்பது சர்வதேச நிபுணர்களின் கணிப்பு….

Tags: relationsinterim leader Muhammad YunusIndiaBangladeshIndia-BangladeshMuhammad Yunus
ShareTweetSendShare
Previous Post

மக்கள் வரிப்பணம் வீண் – அஞ்சுகம் பூங்கா பெயரளவுக்கு சீரமைப்பு பொதுமக்கள் கொந்தளிப்பு! – சிறப்பு தொகுப்பு

Next Post

ருசிக்கு மட்டுமல்ல வரி ஏய்ப்பிலும் பிரபலமான பிரியாணி – விசாரணையில் திடுக்..ரூ.70,000 கோடி வரிஏய்ப்பு – சிறப்பு தொகுப்பு

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies