சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளர்கள் 840 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் தங்களையும் சேர்க்க கோரி ஊராட்சி செயலாளர்கள் சென்னையில் 23 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கடந்த 18ம் தேதி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் பெரியசாமி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இதனால் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. எனினும் பேச்சுவார்த்தைக்கு பிறகும் கடந்த 2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி ஊராட்சி செயலாளர்கள் 840 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதே போன்று 845 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அரசின் இந்த நடவடிக்கையால் ஊராட்சி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
















