கோவை விமான நிலையத்தில் 'Udaan Yatri Cafe' உள்ளிட்ட பல புதிய வசதிகள் - மத்திய அமைச்சரகள் தொடங்கி வைத்தனர்!
Jul 31, 2026, 12:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவை விமான நிலையத்தில் ‘Udaan Yatri Cafe’ உள்ளிட்ட பல புதிய வசதிகள் – மத்திய அமைச்சரகள் தொடங்கி வைத்தனர்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 21, 2026, 11:07 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக ‘Udaan Yatri Cafe’ உள்ளிட்ட பல புதிய வசதிகளை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டன,

நிகழ்ச்சியில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, இணை அமைச்சர் முரளிதர் மோகல் மற்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர்.

கோவை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு குறைந்த விலையில் சிற்றுண்டி வழங்கும் Udaan Yatri Cafe, குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி மற்றும் நூலகம் ஆகியவற்றை மத்திய அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் கோவைக்கு நேரடி சர்வதேச இணைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதற்கான இருதரப்பு ஒப்பந்தங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன என்றும், கோவை நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப விமான நிலையமும் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், கடந்த 1998ஆம் ஆண்டு கோவையில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழாமல் இருந்திருந்தால், கோவை மாநகரின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்திருக்கும் என குறிப்பிட்டார். மேலும் தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தஞ்சாவூர், வேலூர், நெய்வேலி ஆகிய இடங்களில் புதிய விமான நிலையங்கள் அமைக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் எல்.முருகன் தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு, பரந்தூர் விமான நிலையத்துக்கு மத்திய அரசு உரிய முன்அனுமதி வழங்கி உள்ளதாகவும், நிலம் கையகப்படுத்தும் பணிகளை மாநில அரசுதான் மேற்கொள்ள வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

Tags: Minister of State Muralidhar MogalUnion Minister L. MuruganCoimbatore Airport'Udaan Yatri Cafe'Minister for Civil Aviation Ram Mohan Naidu
ShareTweetSendShare
Previous Post

தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளர்கள் 840 பேர் பணியிடை நீக்கம்!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies