கோவை விமான நிலையத்தில் 'Udaan Yatri Cafe' உள்ளிட்ட பல புதிய வசதிகள் - மத்திய அமைச்சரகள் தொடங்கி வைத்தனர்!
Sep 14, 2026, 03:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவை விமான நிலையத்தில் ‘Udaan Yatri Cafe’ உள்ளிட்ட பல புதிய வசதிகள் – மத்திய அமைச்சரகள் தொடங்கி வைத்தனர்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 21, 2026, 11:07 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவை விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக ‘Udaan Yatri Cafe’ உள்ளிட்ட பல புதிய வசதிகளை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டன,

நிகழ்ச்சியில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, இணை அமைச்சர் முரளிதர் மோகல் மற்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர்.

கோவை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு குறைந்த விலையில் சிற்றுண்டி வழங்கும் Udaan Yatri Cafe, குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி மற்றும் நூலகம் ஆகியவற்றை மத்திய அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் கோவைக்கு நேரடி சர்வதேச இணைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதற்கான இருதரப்பு ஒப்பந்தங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன என்றும், கோவை நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப விமான நிலையமும் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், கடந்த 1998ஆம் ஆண்டு கோவையில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழாமல் இருந்திருந்தால், கோவை மாநகரின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்திருக்கும் என குறிப்பிட்டார். மேலும் தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தஞ்சாவூர், வேலூர், நெய்வேலி ஆகிய இடங்களில் புதிய விமான நிலையங்கள் அமைக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் எல்.முருகன் தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு, பரந்தூர் விமான நிலையத்துக்கு மத்திய அரசு உரிய முன்அனுமதி வழங்கி உள்ளதாகவும், நிலம் கையகப்படுத்தும் பணிகளை மாநில அரசுதான் மேற்கொள்ள வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

Tags: Minister of State Muralidhar MogalUnion Minister L. MuruganCoimbatore Airport'Udaan Yatri Cafe'Minister for Civil Aviation Ram Mohan Naidu
Share
Tweet
SendShare
Previous Post

தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளர்கள் 840 பேர் பணியிடை நீக்கம்!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies