தேமுதிகவினர் எப்போதும் 2 குதிரையில் சவாரி செய்பவர்கள் என்றும், ஒரு குதிரை மேற்கு போகும்போது ஒரு குதிரை கிழக்கே போகும் எனவும், அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் விமர்சித்துள்ளார்.
பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டாம்பட்டி அண்ணா நகர் பகுதியில் அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக கூட்டணி மிகவும் வலுவாக உள்ளதாகவும், 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
















